தேசிய மரநடுகை வேலைத்திட்டம் கிளிநொச்சியில் இன்று முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் உள்ள விளாவோடை பிரதேசத்தில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மரநடுகை வேலைத்திட்டம் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், கிளிநொச்சி இராணுவ தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ரவிப்பிரிய, பிரதேச செயலாளர்கள், திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். (நி)