யாழ்ப்பாணம் கரவெட்டி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் தெரிவு செய்யப்பட்ட 2110 சமுர்த்தி பயனாளிகளுக்கான உரிமப் பத்திரம் வழங்கும் நிகழ்வு கரவெட்டி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
சமுர்த்தி பயனாளிகளுக்கான சமூக உரிமைப் பத்திரம் வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கலந்துகொண்டு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு உரிமை பத்திரங்களை வழங்கிவைத்து உரையாற்றினார்.
சமுர்த்தி உரிமம் வழங்கும் இன்றைய நிகழ்வில், கரவெட்டிப் பிரதேச சபையின் தவிசாளர் ஐங்கரன் மற்றும் கரவெட்டிப் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கரவெட்டி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.(மா)