திருகோணமலையின் தமிழர்களின் அடையாளங்களில் ஒன்றான கன்னியா வெந்நீரூற்று பகுதியில் புராதன பிள்ளையார் ஆலயம் இடிக்கப்பட்டு அதே இடத்தில் புத்தர் சிலை அமைப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் குறித்த செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருமலை தென்கைலை ஆதீனம் மற்றும் வடக்கு கிழக்கு பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் இணைந்து தென்கைலை ஆதீனம் தலைமையில் இன்று காலை 11:00 மணிக்கு கன்னியா வெந்நீரூற்று பகுதியில் அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தவுள்ளன.

இதில் அனைத்து தமிழ் உறுவுகளும் இணைந்து தமது எதிர்பை வெளியிடுவதுடன், தமிழர் பூர்வீக அடையாளங்களை பாதுகாக்க ஒன்றுதிரளுமாறு தென்கயிலை ஆதீனம் கோரிக்கை விடுத்துள்ளது. (நி)

Previous articleமுன்னாள் பாதுகாப்பு செயலாளரிடம் 9 மணிநேர விசாரணை!!
Next articleமகா சங்கத்திடம் மன்னிப்பு கேட்க அவசியம் இல்லை-ரஞ்சன்