ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையின் முதலாவது தமிழ் எதிர்க்கட்சி தலைவர் காலஞ்சென்ற அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் நினைவு தினம் நேற்று யாழ்ப்பாணம் பண்ணாகத்தில் நினைவு கூறப்பட்டது.
அந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே மாவை சேனாதிராஜா குறித்த விடயத்தை தெரிவித்தார்.(சே)






