நாட்டின் கல்வி முறைமை, தற்போதைய உலக நடைமுறைக்கு ஏற்றவகையில் காணப்படவில்லை எனவும், அதனால், மூன்றாம் நிலைக் கல்வி முறைமையில் பல்வேறு மறுசீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று பிற்பகல், கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற, சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழாவில், இவ்வாறு குறிப்பிட்டார்.
பல்கலைக்கழக மாணவர்கள் எந்தப் பட்டப்படிப்பைத் தொடர்ந்தாலும், அவர்கள் அனைவரும் குறைந்தது தகவல் தொழில்நுட்பத்திலேனும் ஓரளவு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியதோடு, தற்கால உலகை வெற்றி கொள்வதற்கு அவசியமான ஏனைய திறன்களையும் பெற்றிருக்க வேண்டும்.
நமது பல்கலைக்கழகங்களால், ஏற்கெனவே பல்வேறு புதிய சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
நாடு முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்க்கப்படும் மாணவர் தொகையை பத்தாயிரத்தால் அதிகரித்தமை தற்போதைய அரசாங்கம் அடைந்த பாரிய வெற்றியாகும்.
அவ்வாறு அதிகரித்தாலும்கூட, உயர் தரப் பரீட்சையில் சித்தியடைந்தும், பல்கலைக்கழகக் கல்வியைப் பெற முடியாத ஆயிரக்கணக்கான மாணவர்கள் இன்னமும் இருக்கின்றனர்.
இதற்குக் காரணம், தகுதி பெறும் அனைத்து மாணவர்களுக்கும் இடமளிப்பதற்கு அரச பல்கலைக்கழக கட்டமைப்பில் போதுமான கொள்ளளவு இன்மை ஆகும்.
இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கு, எமது இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இந்தப் பல்கலைக்கழகம் அரச பல்கலைக்கழகமாக மாத்திரம் இருப்பதற்கு, எந்தக் காரணமும் இல்லை.
உலகில் உள்ள அனைத்துச் சிறந்த பல்கலைக்கழகங்களும், அரச பல்கலைக்கழகங்கள் அல்ல.
பெரும்பாலானவை சுதந்திரமான சுய நிர்
உயர்நிலைக் கல்வி முறைமையில் சீர்திருத்தங்கள் தேவை: ஜனாதிபதி





