நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று மழையுடனான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல இடங்களில் மாலையில் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Previous articleதரமற்ற சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பில் நீதிமன்றில் மனுத்தாக்கல்!
Next articleசிறுவர் புனர்வாழ்வு இல்லத்திலிருந்து தப்பியோடிய சிறுமிகளில் மூவர் கண்டுபிடிப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here