நீர்கொழும்பில் வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து நபர் ஒருவரை தாக்கிவிட்டு கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், நீர்கொழும்பு நகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 23 ஆம் திகதி செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய இன்று பகல் நீர்கொழும்பு பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு நகர சபையின் எதிர்க்கட்சி தலைவரான 53 வயதுடைய ஜயவீர ஆரச்சிகே ரொய்ஸ் விஜித பெர்னாண்டோ என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் இதுவரையில் 5 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கட்டான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.(சி)






