ஜப்பான் – இலங்கை நட்புறவு அமைப்பினால் அன்பளிப்பு செய்யப்பட்ட இரு தீயணைப்பு வாகனங்கள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் – இலங்கை நட்புறவு அமைப்பினால் அன்பளிப்பு செய்யப்பட்ட ரூபா 151 மில்லியன்கள் பெறுமதியான இரு தீயணைப்பு வாகனங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

பதில் கடமை புரியும் அமைச்சர் புத்திக்க பத்திரனவின் தலையீட்டில் இந்த தீயணைப்பு வாகனங்கள் இலங்கைக்கு அன்பளிப்பாக கிடைக்கப்பெற்றிருப்பதுடன், ஜப்பான் – இலங்கை நட்புறவு மன்றத்தை சேர்ந்த எரங்கா திலகரத்ன உரிய ஆவணங்களை ஜனாதிபதியிடம் கையளித்தார்.

இந்த தீயணைப்பு வாகனங்களை இலங்கை வான் படையினரின் பாவனைக்காக விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸிடம் ஜனாதிபதி கையளித்தார்.

பதில் கடமை அமைச்சர் புத்திக்க பத்திரனவும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.(நி)

 

Previous articleமருத்துவ சிகிச்சை முறைகள் பலப்படுத்தப்பட வேண்டும்: ஜனாதிபதி (படங்கள் இணைப்பு)
Next articleமுல்லை. மாந்தைகிழக்கில் வீதி சீரின்மையை காரணம்காட்டி பஸ் சேவை நிறுத்தம்.