ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதம் மேலும் பரவுவதற்கு இடமளிக்க முடியாது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளை கைது செய்ய வேண்டும் என்றும் என்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதம் மேலும் பரவுவதற்கு இடமளிக்க முடியாது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
லக்கலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறினார்.
தமிழர்களுக்கு இடையிலும் சிங்களவர்களுக்கு இடையிலும் தீவிரவாதிகள் இருந்ததாக குறிப்பிட்ட பிரதமர் தீவிரவாதிகளுக்கு மன்னிப்பு வழங்கக்கூடாது என்று கூறினார்.
எவ்வாறிருப்பினும் இனவாத அடிப்படையில் முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளக்கூடாது என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அடிப்படைவாதம் மற்றும் இனவாதம் என்பன பௌத்த தர்மத்திற்கு ஒருபோதும் ஏற்புடையதல்ல என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். (நி)








