கொழும்பை அண்மித்த சில பிரதேசங்களுக்கு இன்று 24 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை அறிவித்துள்ளது.

இன்று காலை 09.00 மணிமுதல் நாளை காலை 09.00 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மஹரகம, பொரலஸ்கமுவ, கொட்டாவ, பன்னிபிட்டிய, ருக்மல்கம, பெலவத்தை, மத்தேகொட, ஹோமாகம, பாதுக்க மற்றும் மீபே ஆகிய பிரதேசங்களில் 24 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தின் கிழக்கு நகர நீர் வழங்கல் வேலைத் திட்டத்தின் கீழ் நீர் குழாய் கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட உள்ள அத்தியவசிய திருத்தப் பணிகள் காரணமாகவே நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக அறிவித்துள்ளது. (நி)

Previous articleமுஸ்லிம்களுக்கு வியாபாரம் செய்ய தடைவிதித்த பி.ச.தலைவர் நீதிமன்றில்
Next article19ஆல் நாட்டில் இரண்டு தலைவர்கள்!