ஆப்கானிஸ்தானில் இராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 35 தலீபான் பயங்கரவாதிகளும், 16 ஐ.எஸ். பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர்

ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தி வரும் தலீபான்கள் மற்றும் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆட்டத்தை அடக்க ஆப்கானிஸ்தான் இராணுவம் போராடி வருகிறது. அவர்களுக்கு நேட்டோ படை பக்க பலமாக இருக்கிறது.

இந்த நிலையில், நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள குனர் மாகாணத்தில் தலீபான்கள் மற்றும் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து இராணுவ வீரர்கள் அதிரடி தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் 35 தலீபான் பயங்கரவாதிகளும், 16 ஐ.எஸ். பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதுடன் பதுங்கி குழிகள், ஆயுத கிடங்குகள் உள்ளிட்டவை நிர்மூலமாக்கப்பட்டன. (சே)

Previous articleமக்கள் அரசியல் வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட வேண்டும்!
Next article22,283 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.