அடுத்த ஜனா­தி­பதித் தேர்­தலில் ஐக்­கிய தேசிய கட்­சியை தோற்­க­டிக்க ஜனாதி­ப­தி­யுடன் ஒப்பந்தத்­துக்குச் செல்லவேண்டும்.அத்­துடன் மக்கள் விடு­தலை முன்­னணி ஒரு­போதும் தனது வேட்­பா­ளரை நிறுத்தப்போவதில்லை.

அவர்கள் ஐக்­கிய தேசிய கட்­சிக்கு ஆத­ர­வா­கவே இருப்பார்கள் என ஜன­நா­யக இட­து­சாரி முன்னணியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான வாசு­தேவ நாண­யக்­கார தெரி­வித்தார்.

சோஷ­லிச மக்கள் முன்­னணி நேற்று கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,

ஜனா­தி­பதி வேட்­பாளர் குறித்து பலரும் பல­ரது பெயர்­களைத் தெரி­வித்து வரு­கின்­றனர். என்றாலும் பொது­ஜன பெர­முன கட்சி இது­வரை யாரு­டைய பெய­ரையும் உத்தியோகபூர்வ­மாக அறி­விக்­க­வில்லை.

அத்­துடன் இது ­தொ­டர்­பாக இது­வரை அறிவிக்கப்­ப­டாமல் இருப்­பது எமது பக்கம் இருக்கும் குறை­யாகும். வேட்­பா­ளரின் பெயரை அறி­வித்­தால்தான் தற்­போது இருந்து தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­களை மேற்கொள்­ளலாம்.

பொது­ஜன பெர­மு­னவில் அங்கம் வகிக் கும் கட்­சி­களது தலை­வர்­களின் அடுத்த கூட்டத்தின்போது இது­ தொ­டர்­பாக எமது நிலைப்­பாட்டை நாங்கள் அறி­விக்க இருக்­கின்றோம்.

அதே­போன்று வேட்­பா­ள­ராக தற்­போது தெரி­விக்­கப்­படும் கோத்தபாய ராஜபக் ஷ, ஷமல் ராஜபக் ஷ ஆகி­யோ­ருக்கு எமது கட்­சியின் வேலைத்­திட்­டத்தை கையளித்திருக்கின்றோம். அதே­போன்று பசில் ராஜ­பக் ஷ­வி­டமும் எதிர்­வரும் தினங்­களில் கைய­ளிக்க இருக்­கின்றோம்.

Previous articleநாளை 24 மணி நேர நீர் வெட்டு
Next articleமுஸ்லிம்களுக்கு தங்கொட்டுவை சந்தையில் வியாபாரம் செய்ய தடை!!