வடக்கு மாகாணத்தில், பிரதேச சபைகளை பிரதிநிதித்துவப்படுத்தும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்களுக்கும், வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் இடையிலான சந்திப்பு, இன்று யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தின் கீழ் செயற்பட்டு வரும் மக்கள் பிரதிநிதிகள், தமது பிரதேச மக்களின், பொருளாதார வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் செயற்பட வேண்டும் என கேட்டுக்கொண்ட ஆளுநர், அதை நோக்காக கொண்டுமுன்வைக்கப்படும் திட்டங்களுக்கு, பிரதேச சபைகளின் ஊடாக உதவி புரிவதற்கு தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் என்ற வகையில், பிரதேச சபைகளின் மட்டத்திலும் சமூக மட்டத்திலும் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பில், இதன் போது விரிவாக ஆராயப்பட்டதாக, வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.