எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் மோர்சி, நீதிமன்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
அவர் 2013ம் ஆண்டு பதவிக்கு வந்து சிறிய காலத்திலே இராணுவத்தினால் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
67 வயதான அவர், பதவி நீக்கப்பட்டதில் இருந்து சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
அவரது வழக்கு விசாரணை நேற்று இடம்பெற்ற வேளையில், நீதிமன்ற விசாரணைக் கூட்டில் இருந்து சாட்சி வழங்கிய போது இந்த மரணம் இடம்பெற்றுள்ளது.
மாரடைப்பின் காரணமாகவே அவர் மரணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.(சே)








