வடக்கு கிழக்கை சேர்ந்த புகையிரத கடவைக்காப்பாளர்கள் இன்று வவூனியா புகையிரத நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிரந்தர நியமனம் வழங்கப்படவேண்டும்இ பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருந்து தமது கடமையை புகையிரத திணைக்களத்தின் கீழ் கொண்டு வரவேண்டும் என தெரிவித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
புகையிரத கடவை காப்பாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் 250 ரூபா சம்பளத்தினை உயர்த்துஇ பொலிஸாரிடம் இருந்து எம்மை மீட்க வேண்டும்இ எமது பிள்ளைகளின் எதிர்காலம் என்ன?இ எம்மை நிரந்தர நியமனத்தில் உள்வாங்கு என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை தாங்கியிருந்தனர்.சுமார் ஒரு மணி நேரமாக குறித்த ஆர்ப்பாட்டம் புகையிரத நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது.(சே)