அண்மையில் நியமனம் பெற்ற, பாடசாலைகளுக்கான விளையாட்டுத்துறை பயிற்றுவிப்பாளர்களுக்கான இறுதிக்கட்ட பயிற்சி, வவுனியா சைவப்பிரகாசா மகளீர் கல்லூரியில், இன்று நடைபெற்றது.
வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் மு.இராதாகிருஸ்ணன் தலைமையிலும், ஆசிரிய ஆலோசகர் யூட் பரதகுமாரின் ஒழுங்கமைப்பிலும், கடந்த 9 நாட்களாக, தொடர்;ச்சியாக இப்பயிற்சி வகுப்புக்கள் இடம்பெற்று வருகின்றது.
இப்பயிற்சி வகுப்பில், வவுனியா வடக்கு மற்றும் தெற்கு கல்வி வலயத்தை சேர்ந்த 42 பயிற்றுவிப்பாளர்கள் பங்கேற்று, பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பயிற்சிக்கான வளவாளர்களாக, வவுனியா மாவட்டத்தை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர்கள் கடமையாற்றி வருகின்றனர். (சி)