யாழ்ப்பாணம், வடமராட்சி வல்வெட்டித்துறை நகர சபைக்கான புதிய தவிசாளராக சபாரத்தினம் செல்வேந்திரா ஏகமனதாகவே தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளராக இருந்த கருணானந்தராசாவின் அமரத்துவத்திறக்கு பின்னர் அண்மையில் புதிய தவிசாளராக ச.செல்வேந்திரா தெரிவு செய்யப்பட்ட நிலையில், அவரால் கொண்டுவரப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு இரண்டு தடவைகள் தோற்கடிக்கப்பட்டது. அதனையடுத்து அவர் பதவியிழந்த நிலையில் மீண்டும் இன்றைய தினம் தவாசாளர் தெரிவு இடம்பெற்றது.
இதில் தவிசாளராக மீண்டும் சபசரத்தினம் செல்வேந்திரா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்க்காக உள்ளூராட்சி மன்றங்களின் ஆணையாளர் பற்றிக் நிறஞ்சன் சபையில் சமூகமளித்திருந்தார்.
காலை 10:00 மணிக்கு இடம்பெற்ற இந்நிகழ்வில் ஏகமனதாகவே தவிசாளர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Previous articleஐ.நா சபையின் 7 விசேட அறிக்கையாளர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்!
Next articleநுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிரடி அறிவிப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here