யாழ்ப்பாணம் கோட்டை அந்தோனியார் ஆலய மாதா சொருபம் உடைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் பலரும் சென்றுவரும் நிலையில், மாதா சிலையினை யார் உடைத்தார்கள் என்பது தொடர்பில் இதுவரை தகவல் எதுவும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கோட்டை அந்தோனியார் ஆலயம், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ளமை குறிப்பிடத்தக்கது. (சி)