யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலைதீவு பகுதியில் கடற் படையினரின் ரோந்து நடவடிக்கையின் போது 60 .7 கிலோ கிராம் எடையுடைய பீடி இலைகள் கொண்ட பொதி கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட பீடி இலைகள் பொதி ஊர்காவல்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வட பிராந்திய கடற்படை கட்டளை தலைமையகத்தின் நெறிப்படுத்தலில் கடற் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்று காவல் நடவடிக்கையின் போது குறித்த பீடி இலை பொதி கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. எனினும் குறித்த பீடி இலைகள் அடங்கிய பையுடன் தொடர்புபட்ட எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.(ம)