முல்லைத்தீவில், மாங்குளம் வெள்ளாங்குளம் வீதியின் வடகாட்டுப்பகுதியில், கப் ரக வாகனம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, மின் கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
மாங்குளத்திலிருந்து இன்று மாலை மல்லாவி நோக்கி பயணித்த கப் ரக வாகனம், வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது.
இதன் போது, வாகனத்தில் பயணித்த பாலிநகர் வவுணிக்குளத்தைச் சேர்ந்த, 18 வதுடைய ஜீவகுமார் ஜெனிஸ்குமார் மற்றும் குனாளன் டிசாந்தன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
ஒருவரின் சடலம் மல்லாவி வைத்தியசாலையிலும், மற்றையவரின் சடலம் மாங்குளம் வைத்தியசாலையிலும் வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், விபத்து தொடர்பான விசாரணைகளை, மல்லாவி மற்றும் மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.(சி)