யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவிலில், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ‘முக உத்தர’ திருத்தேர் வெள்ளோட்டம் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.
நாளை மறுதினம் காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை கிரியைகள் நடைபெற்று, திருத்தேர் வெள்ளோட்டப்பெருவிழா திருப்பவனி இடம்பெறவுள்ளது.
21ஆம் நூற்றாண்டின் வரலாற்றுப் பதிவாக, ஈழ நாட்டின் மிகப்பெரிய இரதமாக ‘முக உத்தர’ திருத்தேர் 45 அடி உயரம் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (நி)