தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தினால் மலையக தபால் சேவைகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
நேற்று மாலை 4 மணி முதல் ஆரம்பித்த இந்த தொழிற்சங்க நடவடிக்கை இன்று நள்ளிரவு வரையில் முன்னெடுக்கப்படும் என தபால் சேவை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
அகில இலங்கை தபால் சேவை மற்றும் தொலைத் தொடர்பு ஊழியர்கள் ஒன்றிணைந்து இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கமைய புதிய சேவை சட்டமூலமொன்றை ஸ்தாபித்தல், சனிக்கிழமை கொடுப்பனவில் 20 வீதத்தை வழங்குதல், வெற்றிடங்களை நிரப்புதல் போன்ற 16 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

Previous articleநாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்கள் இன்று பணிபகிஸ்கரிப்பு!
Next articleரயில் மீது மோதிய டிப்பர்: ரயிலுக்கு பலத்த சேதம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here