போதைப்பொருளுக்கு எதிரான போரில் தான் தனிமைப்படவில்லை என்றும், 90 சத வீதமான நாட்டு மக்கள் அப்போராட்டத்தில் தன்னுடன் இணைந்திருப்பதாகவும், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று முற்பகல், இரத்தினபுரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இவ்வாறு குறிப்பிட்டார்.

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனையை வழங்க, நான் மேற்கொண்ட தீர்மானத்திற்கு எதிராக, அரசாங்கத்தில் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் வீதியில் இறங்கும் போது, போதைப்பொருள் கடத்தல்காரர்களும் குற்றவாளிகளும் ஊழல்வாதிகளும் மோசடிக்காரர்களும் வெற்றிப் பெருமிதம் கொள்கின்றனர்.

எதிர்கால தலைமுறையினருக்காக, சிறந்ததோர் நாட்டை கட்டியெழுப்புவதற்காகவே, நான் அனைத்து தீர்மானங்களையும் மேற்கொள்கிறேன்.

அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள், கல்விமான்கள் மற்றும் ஏனைய அனைவரும் ஒன்றிணைந்து, இன்று தாய்நாட்டுக்காக மேற்கொள்ள வேண்டிய பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்ற முன்வர வேண்டும்.
என குறிப்பிட்டார். (சி)

Previous articleவேலையில்லா பட்டதாரிகள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்
Next articleமுஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் பதவியேற்றனர்