பெண்களுக்கு எதிரான வன்முறையை இப்போதே நிறுத்துவோம் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற, பெண்களுக்கான விசேட செயற்திட்டத்தின் இறுதி நாள் நிகழ்வு நேற்று மன்னாரில் நடைபெற்றது.
ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவியுடன், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் அனுசரணையில் நடைமுறைப்படுத்தப்பட்ட, 10 நாள் செயல்வாத நிகழ்சித் திட்டத்தின் இறுதி நாள் நிகழ்வு நேற்று தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.
மன்னார், வவுனியா, முல்லைதீவு மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட 16 செயல் வாத நிகழ்சியை ஒன்றிணைத்து நிகழ்வு நடத்தப்பட்டது.
பிரதம விருந்தினராக, சட்டத்தரணி திருமதி மியூரின் கனியூட் பங்கேற்ற வேளை, சிறப்பு விருந்தினர்களாக, உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், செயளாலர்கள் மற்றும் செல்வி சூரியகுமாரி மற்றும் சன சமூக நிலைய அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள், நகர சபை மற்றும் பிரதேச சபை பெண் உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
செயல்வாத நிகழ்வில், பிரதம விருந்தினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களால், பெண்கள் வன்முறைக்கு எதிரான விசேட சொற்பொழிவுகள் மற்றும் உரைகள் நிகழ்த்தப்பட்டன.

Previous articleமாண்புடன் கூடிய குடும்பங்களை தலைமை தாங்கும் பெண்கள் எனும் தொனிப்பொருள் கருத்தமர்வு!
Next articleபோரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் பிரதமரை சந்தித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here