மட்டக்களப்பு பூநொச்சிமுனை பிரதேச ஆழ்கடல் மீனவர்களின் மீன்பிடி படகுகளில் கடந்த பல வருடங்களாக மீன்கள் திருடப்பட்டு வருவதை கண்டித்தும் இதற்கான சரியான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரியும், இன்று தொடக்கம் தொழில் தவிர்ப்பு போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

சிறிய மீன்பிடி படகுகள் கடலோரத்தில் நிறுத்தியும் பெரிய படகுகள் கடலில் நிறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காத்தான்குடி மற்றும் பூநொச்சிமுனை மீனவர்களின் மீன்பிடி படகுகளில் கடந்த பல வருடங்களாக மீன்கள் திருடப்பட்டு வருவதை கண்டித்தும் இதற்கான சரியான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரியும் பூநொச்சிமுனை மீனவர்கள் கடற்தொழிலுக்கு செல்லாமல் தமது படகுகளை நிறுத்தி இப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். (சி)

Previous articleகுவைத் செம்பிறை மீள்வாழ்வு சிகிச்சை நிலையம் திறப்பு!
Next articleகுருணாகல் வைத்தியர், ஷாபி பிணையில் விடுதலை