ஜனாதிபதித் தேர்தலில் போலி வேட்பாளர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, கட்சித் தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்தோடு, ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கட்சித் தலைவர்களுடனான சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
ஏனைய வேட்பாளர்களின் வாக்குகளை கைப்பற்றுவற்காக அல்லது வேட்பாளர்களுக்கு வழங்கப்படும் பரப்புரை நேரம் போன்ற வசதிகளை தவறாக பயன்படுத்துவதற்காக மற்றொரு கட்சி அல்லது வேட்பாளர் யாரேனும் ஒருவர் களமிறக்கப்படுவதாக கண்டறியப்பட்டால், அவரது பெயர் வாக்களர்களின் முன்பாக அம்பலப்படுத்தப்படும்.
போலி வேட்பாளர்கள் என கண்டறியப்பட்டால், வேட்பாளர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் உடனடியாக இரத்துச் செய்யப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பரிய எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(நி)