போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் கலாநிதி செய்யதினா முஹத்தல் செய்ஃபுத்தின் சஹெப், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை, நேற்று சந்தித்துள்ளார்.
இச்ந்திப்பு, அலரி மாளிகையில் இடம்பெற்றது.தான் நேசிக்கும் ஒரு நாடு என்ற ரீதியில், இலங்கைக்கு மீண்டும் விஜயம் செய்யக் கிடைத்தமை குறித்து மகிழ்ச்சியடைவதாக தெரிவித்த ஆன்மீகத் தலைவர், கொரோனா தொற்றில் இருந்து, நாட்டு மக்களை பாதுகாப்பதற்கு, இலங்கை அரசாங்கம் தடுப்பூசி ஏற்றும் செயற்பாட்டை மிகவும் வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளமையை பாராட்டுவதாகவும் குறிப்பிட்டார்.
வர்த்தக செயற்பாடுகளின் ஊடாக, இந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு, போரா சமூகத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் பணியை, பிரதமர் பாராட்டினார்.
இந்த சந்தர்ப்பத்தில், போரா ஆன்மீகத் தலைவர் உள்ளிட்டோரும், அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் பங்கேற்றனர்.
போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் பிரதமரை சந்தித்தார்
