யாழ்ப்பாணம் ஈச்சமோட்டைப் பகுதியில், ஹெரோயின் போதைப்பொருளுடன் நடமாடிய இராணுவ உத்தியோகத்தர் ஒருவர் உட்பட 5 பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து ஒரு கிராம் 100 மில்லிக்கிராம் அளவுடைய ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் ஈச்சமோட்டை பகுதியில் நேற்று பொலிஸார் முன்னெடுத்த சுற்றுக்காவல் நடவடிக்கையின் போது சந்தேகநபர்கள் ஐவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் ஒருவர் இராணுவத்தில் சேவையாற்றும் தமிழ் உத்தியோகத்தர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.(சி)