நாட்டிலுள்ள பாடசாலைகளில் பாதுகாப்பு குறைபாடுகள் காணப்படுவதாக வெளியாகும் வதந்திகள் குறித்து பொதுமக்கள் வீணாக அச்சப்படவேண்டிய அவசியமில்லை என்று பொலிஸ் பேச்சாளர் கூறுகிறார்.
மேலும் பாடசாலைகளில் குண்டுப் புரளி தொடர்பாக வெளியாகும் எந்தவொரு தகவலிலும் உண்மை இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
மாணவர்களின் பாதுகாப்புக் குறித்து இராணுவத்தினருடன் இணைந்து பொலிஸார் உரிய ஏற்பாடுகளை செய்துவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.