முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தால் குடிநீர் வழங்கப்படுகிறது.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 18 கிராமங்களை சேர்ந்த ஆயிரத்து 967 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இக்குடும்பங்களுக்கு பௌசர்கள் மூலம் நாள்தோறும் 20 ஆயிரம் லீற்றம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Previous articleவங்கியில் வேலைவாய்ப்பை பெற்றுத் தருவதாக கூறி மோசடி
Next articleரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு