சர்வதேச சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலின் கீழ் கிழக்கில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமான பாசிக்குடாவில் அமைந்துள்ள சக்தி வாணி ஆயுர் வேத நிலையத்தில் அதன் ஸ்த்தாபகர் திருமதி கலைவாணி ரவிச்சந்திரன் தலைமையில் மரநடுகை, சேதன பசளை தயாரித்தல் மற்றும் மூலிகை மரங்கள் நடுதல் போன்ற நிகழ்வுகள் இன்று புதன் கிழமை நடைபெற்றது.
இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க தகவல் திணைக்கள உத்தியோகஸ்த்தர் வ.ஜீவானந்தம், பொதுமுகாமையாளர் கா.சிவயோகதாஸன் ஆகியோர் கலந்துகொண்டனர்.