கம்­பஹா, கொழும்பு, கேகாலை, கண்டி, களுத்­துறை, நுவ­ரெ­லியா, இரத்­தி­ன­புரி, காலி மற்றும் மாத்­தளை ஆகிய மாவட்­டங்­களில் அதி கூடிய மழை வீழ்ச்சி பதி­வாகும் என்று சிவப்பு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த சில தினங்­க­ளாக நிலவும் மழை­யு­ட­னான காலநிலைக்கமைய இரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் 172.5 மில்லி மீற்றர் அதி­கூ­டிய மழை வீழ்ச்சி பதி­வா­கி­யுள்­ளது. அத்­தோடு நுவ­ரெ­லியா, கண்டி ஆகிய மாவட்­டங்­க­ளிலும் சில பிர­தே­சங்­களில் 100 மில்லி மீற்­ற­ருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதி­வா­கி­யுள்­ளது.

பலத்த காற்று, – சிவப்பு எச்­ச­ரிக்கை

மன்னார், புத்­தளம், குரு­ணாகல், கம்­பஹா, கொழும்பு, கேகாலை, கண்டி, களுத்­துறை, நுவ­ரெ­லியா, இரத்­தி­ன­புரி, காலி, மாத்­தளை மற்றும் அம்­பாந்­தோட்டை ஆகிய மாவட்­டங்­களில் பலத்த காற்று வீசக்­கூடும் என்று சிவப்பு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. (சே)

Previous articleநீரில் அடித்து செல்லப்பட்ட மற்றுமொரு சிறுமி கண்டுபிடிப்பு
Next articleரணில் அரசியல் தீர்வு என்னும் பெயரில் தேர்தல் நடவடிக்கை!