பதுளை சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த 5 கைதிகள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளை சிறைச்சாலை திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.
பதுளை சிறைச்சாலையில் பதற்றம்: 05 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதி!
