திருகோணமலை,  புல்மோட்டை – முஸ்லிம் மீனவர்களுக்குச் சொந்தமான  3 படகுகள் மற்றும் இரண்டு இஞ்சின்கள் தீ இட்டுக் கொழுத்தப்பட்டுள்ளன.

இச்சம்பவம், இன்று  (25) காலை இடம்பெற்றதாக புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

புல்மோட்டை –  ஜின்னாபுரக் கடலில்  இனந்தெரியாத நபர்களால், அப்பகுதி மீனவர்களுக்குச் சொந்தமான மீன்பிடி படகுகள் 3 மற்றும் 40 குதிரைவலு கொண்ட 2 இன்ஜின்கள் முற்றாக  தீ மூட்டி எரிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இச்சம்பவம் தொடர்பில் எவரும் கைதுசெய்யப்படவில்லை.

Previous articleசொல்லாடுகளம்
Next articleதாக்கியவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை புறக்கணிப்பது சரியில்லை’