அம்பாறை மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிகு திருக்கோவிலில் திருவருள் கொண்டு அருள் பாலிக்கும் தொன்மைமிகு நாகர்முனை கந்தப்பாணத்துறை என போற்றப்பட்டு வரும் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடியமாவாசை கொயேற்றத் திருவிழாவின் அக்கரைப்பற்று பகுதி மக்களின் திருவிழா நேற்று(25) சிறப்பாக நடைபெற்றது.

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு தென்கிழக்குத் திசையில் திருக்கோவிலில் அமைந்துள்ள வரலாறுகள் பல கூறும் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடியமாவாசை திருவிழா கடந்த 14ந் திகதி கொயேற்றத்துடன் ஆரம்பமானது.

கொடியேற்றத்தடன் ஆரம்பமான ஆடியமாவாசை உற்சவமானது தினமும் 18நாட்கள் விஷேட யாகங்கள், கிரியைகள் கொடித்தம்ப பூஜைகள் இடம்பெற்று எதிர்வரும் 31ம் திகதி புதன்கிழமை காலை வங்ககடலில் இடம்பெறும் தீர்த்தோற்சவத்துடனும் மறுநாள் இடம்பெறும் பூங்காவனத்திருவிழாவுடனும் வைரவர் பூஜையுடனும் நிறைவுறவுள்ளது.

நேற்றிரவு ஆலயத்தில் இடம்பெற்ற கொடித்தம்ப பூஜை மற்றும் வசந்த மண்டப பூஜையினை தொடர்ந்து முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராய் விநாயகப்பெருமானுடன் எழுந்தருளி ஆலயத்தில் உள் வீதியுலா வந்தார்.

தொடர்ந்து வள்ளி தெய்வானை சமேதரர முருகப்பெருமான்; மற்றும் விநாயகப்பெருமான் அலங்கரிக்கப்பட்ட அழகிய இரு தேர்களில் அமர்ந்து கொண்டனர்.

இரு தேர்களில்; அமர்ந்த எம்பெருமானை பெருந்திரளான மக்கள் ஒன்றினைந்து அரேகரா எனும் வேண்டுதலுடன் வெளிவீதி உலாவாக வடம்பிடித்து இழுத்துச் சென்றனர்.

பின்னர் வசந்த மண்டபத்தில் அமர்த்தப்பட்ட முருகப்பெருமானுக்கான பூஜை நடைபெற்றதுடன் திருப்பொன்னூஞ்சல் நிகழ்வுடன் இரவுத்திருவிழா நிறைவுற்றது.

கிரியைகள் யாவற்றையும் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் தலைமையிலான குருமார்கள் நடாத்தி வைத்தனர்.

Previous articleபுதிய அரசியலமைப்பு தொடர்பில் பாராளுமன்றில் விவாதம்!
Next articleமாவிட்டபுரத்தில் நாளை மறுதினம் திருத்தேர் வெள்ளோட்டம்! (காணொளி இணைப்பு)