திருகோணமலை தோப்பூர் பிரதேசத்தில் வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

திருகோணமலை தோப்பூர் கிளையின் ஸக்காத் அமைப்பின் ஏற்பாட்டில் தோப்பூர் பிரதேசத்தில் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள 65 வறிய குடும்பங்களுக்கு நேற்றைய தினம் வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் திருகோணமலை தோப்பூர் கிளையின் ஸக்காத் அமைப்பின் ஏற்பாட்டில் வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.

தோப்பூரில் உள்ள செல்வந்தர்களால் ஸக்காத் நிதி பெறப்பட்டு, வாழ்வாதார உதவிகளாக ஆடு, தையல் இயந்திரம், பலசரக்கு கடைகளுக்கான உதவி, தேனீர் கடைக்கான உதவி, மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வில் தோப்பூர் ஜம்மியத்துல் உலமா கிளையின் தலைவர் டாக்டர் எஸ்.எம்.நளீம் மௌலவி, ஸக்காத் அமைப்பின் தலைவர் ஆர்.எம்.றுபைஸ் மௌலவி, தோப்பூர் நூரியா அரபுக் கல்லூரி அதிபர் என்.அமானுல்லா மௌலவி, தோப்பூர் அனைத்து பள்ளிவாசல் சம்மேளனத் தலைவர் ஏ.எல்.கலிலுர் ரஹ்மான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். (நி)

Previous articleவவுனியா தீ விபத்தில் வீடு ஒன்று முற்றாக சேதம்!
Next articleகடந்த வருடம் மாத்திரம் 12 ஆயிரம் குழந்தைகள் பலி-ஐ.நா அறிக்கை