தலவாக்கலை – பெருந்தோட்டத்துக்குட்பட்ட லிந்துலை மட்டுக்கலை தோட்டத்தைச் சேர்ந்த சின்ன மட்டுக்கலை, பெரிய மட்டுக்கலை ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.மட்டுக்கலை தொழிற்சாலைக்கு முன்பாக பதாதைகளையும், கறுப்பு கொடிகளையும் ஏந்திவாறு, கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொழிலாளர்களுக்கு தோட்ட நிர்வாகம் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகவும், தேயிலை மலைகள் காடாகி கிடப்பதாகவும், கொழுந்து விளைச்சல் குறைவாக உள்ள நிலையில் தோட்ட நிர்வாகம் ஒரு நாள் சம்பளத்திற்கு 20 கிலோ தேயிலையை கட்டாயமாக பறிக்க வேண்டுமென அழுத்தம் கொடுத்து வருவதாகவும், தோட்ட அதிகாரி முறையாக தோட்டத்தை வழி நடத்தவில்லை எனவும் தெரிவித்து, தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
காலை 8 மணி முதல் பகல் 11 மணிவரை இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கூட்டு ஒப்பந்தம் இல்லாத காரணத்தினால் பல சிரமங்களை எதிர் நோக்குவதாகவும், கூட்டு ஒப்பந்தம் மீண்டும் வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.
தலவாக்கலையில் தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!
