தபால் ஊழியர்களின் பகிஷ்கரிப்பு இன்றும் தொடர்கிறது.
தபால் அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தமையால், தமது தொழிற்சங்க நடவடிக்கையைத் தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக, ஒன்றிணைந்த தபால் ஊழியர் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தபால் அமைச்சருடன் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது தமது கோரிக்கைக்கான உரிய தீர்வு வழங்கப்படவில்லை என, ஒன்றிணைந்த தபால் ஊழியர் சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார குறிப்பிட்டுள்ளார்.
தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக மத்திய தபால் பரிமாற்றகத்தில் ஒரு இலட்சத்து 35 ஆயிரத்திற்கும் அதிகமான கடிதங்கள் தேங்கியுள்ளதாக, தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன குறிப்பிட்டுள்ளார்.
அவற்றில் 35 ஆயிரத்திற்கும் அதிகமானவை பதிவுத் தபால்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட தபால் ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பு இன்று மாலை 4 மணி வரை முன்னெடுக்கப்படவுள்ளது. (நி)








