முல்லைத்தீவு கேப்பாபுலவு இராணுவ முகாமில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு 59ஆவது படைப்பிரிவு பகுதிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள, இலங்கை இராணுவத்தின் 16ஆவது பொறியியல் பிரிவு முகாமில், சமையல் செய்வதற்காகச் சென்றிருந்த ஊழியர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று காலை குறித்த நபர் தூக்கில் தொங்கியவாறு இருப்பதை அவதானித்து முள்ளியவளை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கெக்கிராவ பகுதியை சேர்ந்த 57 வயதுடைய கருணாரட்ன என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (சி)

Previous articleவவுனியாவில், நீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்துவைப்பு
Next articleயாழில், வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்