குருநாகல் குளியாப்பிட்டியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், காயமடைந்த ஒருவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குளியாபிட்டிய பகுதியில் நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த நபர்மீது, வானொன்றில் சென்ற குழுவினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று இரவு 8.10 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த அபலதெனிய, கொமுகொமுவ பகுதியைச் சேர்ந்த 31 வயதான சமன் சந்தன என்ற நபர், குளியாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர்கள் குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை எனத் தெரிவித்துள்ள பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (நி)