கிராமத்திற்கு கிராமம் வீட்டுக்கு வீடு வீடமைப்பு திட்டத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக் கிழமை கல்குடா வேப்பஞ் சோலை கிராமத்தில் நடைபெற்றது.
கல்குடா கிராம சேவகா் க.கிருஷ்ணகாந் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினா் சீ.யோகேஸ்வரன், கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளா் சோபா ஜெயரஞ்சித்,உதவி திட்டப்பணிப்பாளா் எஸ்.சிவநேசராஜா,வீடமைப்பு அதிகார சபையின் உதவிப் பொறியியலாளா் பி.கமலநாதன் தொழில் நுட்ப உத்தியோகஸ்த்தா்களான எம்.வத்சலா,த.டிரோஜன் மற்றும் சமூா்த்தி உத்தியோகஸ்த்தா் எம்.காளிராஜா ஆகியோா்கள் நிகழ்வில் கலந்து கொண்டனா். (MA)






c 








