மட்டக்களப்பு காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப்பள்ளிவாசலில் நோன்பு பெருநாள் தொழுகை இன்று நடைபெற்றது.
பெருநாள் தொழுகையினை பள்ளிவாசல் இமாம் மௌலவி பாசில் முப்தி நடாத்தி வைத்தார். அத்துடன் ஜும்ஆப்பிரசங்கத்தை பள்ளிவாசலின் மற்றுமொரு இமாம் மௌலவி எம்.ஏ.ஹாலித் ஹசன் நிகழ்த்தினார்.
இதில் காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் பள்ளிவாசலின் தலைவர் எம்.சி.எம்.ஏ.சத்தார் உட்பட முக்கியஸ்தர்கள் பெருந்திரளான பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.