நாட்டிற்கு வருகை தந்துள்ள, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன் உள்ளிட்ட குழுவினருக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குழுவினருக்கும் இடையில், சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பு, நேற்று இரவு கொழும்பில் நடைபெற்றது.
இதில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி மற்றும் மேல் மாகாண சபை முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலி உள்ளிட்டோருடன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளர் அமீர் அலி, செயலாளர் நாயகம் சுபைர்தீன், பொருளாளர் ஹூசைன் பைலா, சிரேஷ்ட சட்டத்தரணிகளான சஹீட், ருஸ்தி ஹபீப், கட்சி முக்கியஸ்தர்களான யூசுப் மரைக்கார், அனீஸ் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன், ரியாஸ் சாலி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
காதர் மொகிதீன் – ரிஷாட் சந்திப்பு!
