சிங்கராஜ வனப்பகுதியல் சூரியகந்த-அலுத் இல்லம பிரதேசத்தில் ஏலக்காய் பறிப்பதற்காக சென்று காணாமல் போயிருந்த இரண்டு பெண்களும் தெனியாய-விஹாரஹேன பிரதேசத்தில் வைத்து வனத் திணைக்கள அதிகாரிகளால் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
கொலொன்ன-இத்தகந்த பிரதேசத்தில் வசித்து வந்த 39 மற்றும் 40 வயதுடைய இரண்டு பெண்களே இவ்வாறு காணாமல் போயிருந்தனர்.
நேற்று முன்தினம் குறித்த பெண்கள் காட்டுக்குள் பிரவேசித்திருந்த நிலையில் பொலிஸ், இராணுவம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை ஆகியோர் நேற்றைய தினம் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
காட்டுக்குள் காணாமல்போன பெண்கள் கண்டுபிடிப்பு: நடந்தது என்ன?
