களுத்துறை, ஹொரணை பகுதியிலுள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ள தீ விபத்தால் தொழிற்சாலைக்குள் பெருமளவு ஊழியர்கள் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீயை கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்பு அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஹொரணை தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
தீப்பற்றி எரியும் தொழிற்சாலைக்குள் சிக்கியுள்ள ஊழியர்களை மீட்கும் நடவடிக்கையில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். (நி)






