திருகோணமலை கன்னியாவை பாதுகாத்தல் தொடர்பில் சைவமகா சபையின் ஏற்பாட்டில் நேற்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
பௌத்த மயமாகும் ஆபத்தினை எதிர்கொண்டுள்ள திருகோணமலை கன்னியா வெந்நீருற்று பிள்ளையார் ஆலயம், வெந்நீருற்று ஆகியன அடங்கியுள்ள பிரதேசத்தை பாதுகாக்கும் வகையில், அகில இலங்கை சைவ மகா சபையின் ஏற்பாட்டில் விசேட கலந்துரையாடல் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் சின்மயா மிசன் மாநாட்டு மண்டபத்தில் அகில இலங்கை சைவ மகா சபைதலைவர் வைத்திய கலாநிதி பரா.நந்தகுமார் தலைமையில் இக் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, தென் கையிலை ஆதீன முதல்வர், யாழ்ப்பாணம் சின்மயா மிசன் சுவாமி சிதாகானந்தா ஆகியோர் கலந்துகொண்டு, தமிழரின் தொன்மைகளை எவ்வாறு பாதுகாப்பது போன்ற கருத்தரைகளை வழங்கினர்.
இந்த கலந்துரையாடலில், சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர். (நி)