ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயற்பட்ட அவுஸ்ரேலியர்கள், நாடு திரும்புவதற்குத் தடை விதிக்கும் சட்ட மசோதா, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக, உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பெண்கள் சிரியா சென்றனர்.அங்கு பயங்கரவாதிகளின் மனைவிகள் ஆகி, குழந்தைகளையும் பெற்றனர்.
தற்போது ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு தோற்கடிக்கப்பட்ட நிலையில், அந்த பெண்களும், குழந்தைகளும் சிரியாவிலுள்ள தடுப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் சுமார் 50 பேர் அவுஸ்ரேலியர்கள் ஆவர்.
இந்நிலையில், ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட பெண்களை மீண்டும் நாட்டுக்குள் அனுமதித்தால், அது தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என பல்வேறு தரப்பினரும் அச்சம் தெரிவித்து வந்தனர்.
இதனையடுத்து, சிரியா அகதிகள் முகாம்களிலிருந்து பெண்கள் மற்றும் குழந்தைகளை திரும்பப் பெறுவதை 2 ஆண்டுகளுக்கு நிறுத்திவைப்பதற்கான சட்ட மசோதா அவுஸ்ரேலியா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. (நி)