ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுற்றாடல் அமைச்சின் செயலாளருக்கு முக்கிய பணிப்புரையொன்றை நேற்றைய தினம் வழங்கியுள்ளார்.

இலங்கைக்குள் சின்சோ வகை வாள்கள் கொண்டு வரப்படுவதை தடை செய்வதற்கான அமைச்சரவை பத்திரத்தை விரைவில் தயாரிக்குமாறே பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

வனப் பாதுகாப்பு திணைக்களத்தின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் நேற்று இடம்பெற்றுள்ளது.

சின்சோ வாள்களின் அனைத்து வகைகளையும் தடை செய்வதற்காக அண்மையில் அரசாங்கத்தால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த தீர்மானத்தின் பின்னரான நடவடிக்கைகள் தொடர்பில் குறித்த மீளாய்வு கூட்டத்தின் போது ஜனாதிபதி கேட்டறிந்து கொண்டார். அதன் பின்னரே மேற்படி பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், சட்டவிரோதமாக மரக்குற்றிகளை வைத்திருக்கும் மர ஆலை உரிமையாளர்களின் அனுமதி பத்திரங்களை உடனடியாக தடை செய்யுமாறும் ஜனாதிபதி இதன்போது உத்தரவிட்டுள்ளார்.

Previous articleபிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம்!!
Next articleபொதுமக்களுக்கு பொலிஸ் பேச்சாளர் விடுத்துள்ள அறிவிப்பு: பயப்படவேண்டாமாம்!!