இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு எதிர்வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேல் நாட்டின் நீண்ட கால பிரதமர் என்ற சாதனையை படைத்தவராக பிரதமர் நேதன்யாகு காணப்படுகின்றார். இந்நிலையில், செப்டம்பர் 9 ஆம் திகதி இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளும் இஸ்ரேல் பிரதமர், சில மணி நேரங்களே இந்தியாவில் தங்குவார் என்றும் இதன்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுவார் எனவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. (மு)








