அம்பாறை பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அரச திணைக்களங்களில் கடமையாற்றும் இரண்டாம் மொழி சிங்கள பாடநெறியை பூர்த்தி செய்த தமிழ் மொழி உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வானது பொத்துவில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
தேசிய ஒருமைப்பாட்டு இணைப்பாளர் எல்.ஏ.சி.அனுருத்த தலைமையில், பொத்துவில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜினால்வைபவ ரீதியாக ஆரம்பிக்கப்பட்டு, இன்று உத்தியோகத்தர்களிடம் சான்றிதழ்கள் கையளிக்கப்பட்டன.
இவ் இரண்டாம் மொழி சிங்கள பாடநெறியானது தேசிய ஒருமைப்பாடடு அரச கரும மொழிகள் சமூக மேம்பாட்டு மற்றும் இந்து சமய விவகார அமைச்சின் ஊடாக நடாத்தப்பட்டது.
பயிற்சிகளில் பொத்துவில் பிரதேசத்தில் உள்ள அனைத்து அரச திணைக்களங்களில் இருந்து சுமார் 100 தமிழ் மொழி அரச உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு இப் பயிற்சி நெறியை பூர்த்தி செய்து இருந்தனர்.
இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ்,தேசிய ஒருமைப்பாட்டு இணைப்பாளர் எல்.ஏ.சி.அனுருத்த, கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.சுபையிர் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு இருந்தனர்.(மா)